News August 8, 2024
நாய் தொல்லையை கட்டுப்படுத்துக: ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் நகராட்சி பகுதி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், சிறுவர்கள், பேருந்து பயணிகள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 3, 2025
மதுரை: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

மதுரை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
மதுரை: டீக்கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா எனுமிடத்தில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, கடையில் அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்ட சீரியல் விளக்குகளில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது. இதை தொட்ட டீ மாஸ்டர் பாலகுரு (50) கீழே விழ, அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) என இருவரும் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News December 3, 2025
மதுரை: ஜாமீனில் வந்தவரை கொலை செய்த 3 பேர் கைது

மதுரை மீனாட்சிபுரம் பாண்டித்துரை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த அவரை நாடக மேடையில் படுத்து தூங்கிய போது, மர்ம கும்பலால் பாண்டித்துரையை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் விசாரணையில் முன் விரோத காரணமாக கொலை நடந்தது எனவும், பாண்டித்துரையுடன் சுற்றித்திரிந்த செல்லூர் ராஜதுரை (35), மணிரத்தினம் (34), டேவிட் அந்தோணி ராஜ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


