News February 21, 2025
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 23, 2025
இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த<
News February 23, 2025
போலீசுக்கு போக்குக்காட்டிய திருடர்கள் கைது

காஞ்சிபுரத்தில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த 3 திருடர்களை 100க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து பணம், நகை, வாகனங்களைத் திருடி வந்த கும்பலிடமிருந்து, 25 சவரன் நகைகள், 1 வைர மோதிரம், 340 கிராம் வெள்ளிப் பொருட்கள், கார், ஆட்டோ, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் என 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News February 22, 2025
காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.