News December 31, 2024

நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு, ஈரோடு மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 60 பேரை, போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 18, 2025

ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.

News September 18, 2025

ஈரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரின் நேர்மை

image

சத்தியமங்கலத்தில் அரசு பேருந்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணத்துடன் இருந்த பையை தவற விட்ட மூதாட்டியிடம் பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் மாதேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாராட்டு. மேலும் பணம் மற்றும் நகையை பாதுகாப்பாக எடுத்து ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News September 18, 2025

ஈரோடு மக்களே முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 30- ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு தபால் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில், அஞ்சல் துறை சேவைகள் பற்றி பொதுமக்களின் குறை மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் 24 தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா்
கி.கோபாலன் தெரிவித்தார்.

error: Content is protected !!