News May 8, 2025
நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
Similar News
News December 17, 2025
பரமத்தி வேலூர்: ஆற்றில் வந்த வாலிபர் சடலம்

பரமத்தி வேலூர் அருகில் அமைந்துள்ள சோழசிராமணி காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் காவிரி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையம் அருகே கிடந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
வேலகவுண்டம்பட்டி அருகே பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

வேலகவுண்டம்பட்டி அருகே தட்டாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் இவரது மனைவி ரங்கம்மாள் வயது 60 இவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் இந்த நிலையில் ரங்கம்மாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கிய கீழே விழுந்தார் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் மருத்துவர் பரிசோதனை செய்து இறந்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
News December 17, 2025
நாமக்கல்: மின்தடை அறிவிப்பு! ரெடியா இருங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (டிச.18) பராமரிப்பு காரணமாக காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, கொல்லிமலை, காரவள்ளி, உத்திரகிடிகாவல், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் பார்க், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, பில்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


