News November 23, 2024
நாமக்கல்: 322 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ. 1-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (நவ.23) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
நாமக்கல்லில் நாளை மின் ரத்து அறிவிப்பு

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை(ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, நாமக்கல், நெல்லியாராயண், அய்யம்பாளையம், வெற்றிப்பட்டி, வையந்ததம், NGGO காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் ரத்து ஏற்படும். இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
News July 8, 2025
நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
News July 8, 2025
அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11%. <<16987924>>*விண்ணப்பிப்பது எப்படி*<<>> உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!