News February 17, 2025

நாமக்கல்: 3-ம் கட்டமாக 60 முகாம்கள் நடத்த உத்தரவு

image

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 22, 2025

வாக்காளர் பட்டியல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நவம்பர்-22ந் தேதி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 22, 2025

100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கட்சியினா் சிறப்பாக கொண்டாட வேண்டும், நவ.27-ல் பிறக்கும் நூறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

News November 22, 2025

நாமக்கல்: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் கோழிகளில் ஏற்பட்ட வெள்ளை கழிச்சல் காரணமாக பல கோழிகள் இறந்ததாக, கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள், கோழிகளின் எதிர்ப்பு சக்தியை ஊநீர் பரிசோதனை மூலம் அறிந்து, தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!