News February 17, 2025
நாமக்கல்: 3-ம் கட்டமாக 60 முகாம்கள் நடத்த உத்தரவு

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 12, 2025
மோகனூர் அருகே விபத்து ஒருவர் பலி!

மோகனூர் அடுத்த காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் கரூர் மாவட்டம் புகளூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அயர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
News November 12, 2025
நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!
News November 12, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.11 நாமக்கல்-( TR.BALACHANDAR – 9498169138 ) ,வேலூர் -( TR.RAVI – 9498168482 ), ராசிபுரம் -( TR.GOVINDHASAMY – 9498169110 ), பள்ளிபாளையம் -( VENKATACHALAM – 9498169150 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


