News February 17, 2025
நாமக்கல்: 3-ம் கட்டமாக 60 முகாம்கள் நடத்த உத்தரவு

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
நாமக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 24, 2025
நாமக்கல்லில் கார் மோதி பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம், கதிராநல்லூர் நத்தம்மேடு எம்ஜிஆர் காலனி சேர்ந்தபெரியசாமி (57) வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்லும் போது சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த கார் அவரது ஸ்கூட்டரில் மோதி படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 24, 2025
மோகனூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் சடலம்!

மோகனூர் அருகே வடுகப்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (75) ஒருவந்தூரில் உள்ள தமிழழகன் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி சென்ற அவர் காணாமல் போனார். நேற்று மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அது சுப்பிரமணி என்பதை மகன் கோபி அடையாளம் கண்டார். மோகனூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


