News June 26, 2024
நாமக்கல்: விவசாயிகள் குறைதீா் கூட்டம் எப்போது?

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 28) காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
ஆஞ்சநேயர் கோவிலில் வெடி குண்டு மிரட்டல்!

நாமக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோவிலில் மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் என தகவல் வந்ததின் பேரில் நேற்று (அக்.13) மாலை 6.30 மணிக்கு BBDS SSI அருணாச்சலம், SSI கோபி, BBDS Dog டயானா, HC வேல்முருகன், HC சௌந்தர்ராஜன், HC ரமேஷ் ஆகியோர் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் சோதனை செய்தனர். இதனால் ஆஞ்சநேயர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News October 13, 2025
நாமக்கல் : மாநகராட்சியில் புதிய மேயர் அறை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் உடன் நகர கழக செயலாளர்கள் செ.பூபதி (துணை மேயர்), செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News October 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர் 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 14) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.