News April 11, 2025

நாமக்கல் : ரூ.13,300 தொகுப்பூதியத்தில் வேலை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நலச்சங்கம் கீழ் பணிபுரிய காசநோய் சுகாதார பார்வையாளர் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் 1 பணியாளர் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதியம் ரூ.13,300 ஆகும். மேற்கண்ட பணியிடத்திற்கு வயது வரம்பு 65க்குள் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 292025 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 23, 2025

நாமக்கல்லில் வரலாறு காணாத விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.23) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 94-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முட்டை விலை வரலாறு காணாத உச்ச நிலையில் விற்பனையாகி வருகிறது.

News November 23, 2025

நாமக்கல் அருகே விவசாயிக்கு கத்தி குத்து!

image

நாமக்கல், தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் (80). விவசாயி. தோட்டத்தில் தனியாக இருந்த சுப்பராயனை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நிலத்தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

News November 22, 2025

ராசிபுரம் அருகே பெண் விபரீத முடிவு

image

ராசிபுரம் அருகே சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(24).இவரது மனைவி காயத்ரி(20). இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!