News March 19, 2024
நாமக்கல்: ரூ.1லட்சம் லிமிட் பரிவர்த்தனை காண்காணிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் அலுவலர் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் விவரங்களை தெரிவிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News April 20, 2025
நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
News April 20, 2025
நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில், வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.