News January 23, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
நாமக்கல்: தொழிலாளி மர்ம மரணம்!

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி குமாரபாளையத்தில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் வேலை செய்வதற்காக நேற்று வந்தார். அப்பொழுது நேற்று இரவு குமாரபாளையம் பிரதான சாலையில் உள்ள மூன்றாவது மாடியில் அவர் தங்கி இருந்த நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 17, 2025
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்பி மாதேஸ்வரன்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News September 17, 2025
பாண்டமங்கலம்: புரட்டாசி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.