News October 23, 2024
நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News September 16, 2025
நாமக்கல்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

நாமக்கல், மல்லூர், ராசிபுரம், சமயசங்கிலி ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, பழந்தின்னிப்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், ராசிபுரம், சமயசங்கிலி, சீராம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!
News September 16, 2025
நாமக்கல்: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானோரை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
நாமக்கல்லில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு

நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 17ஆம் தேதி நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி, சிலுவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தும்மங்குறிச்சி, எர்ணாபுரம் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்!