News April 28, 2025
நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!
Similar News
News November 30, 2025
நாமக்கல்லில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிபாளையம் டிஎஸ்பி கெளதம் உள்ளிட்ட போலீசார் நேற்று மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஜீவா செட் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடை சோதனையிட்டபோது அனுமதி இல்லாமல் 247 மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .இதனை எடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபி கண்ணன் என்பவரை கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 30, 2025
நாமக்கல் அருகே பஸ் மோதி விபத்து: ஒருவர் பலி

பள்ளிப்பாளையம் அருகே, ரங்கனுார் பகுதியை சேர்ந்தவர் குருவன், 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ், குருவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குருவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 30, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


