News April 28, 2025
நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!
Similar News
News November 26, 2025
நாமக்கல்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் நவ.28ந் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 26, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 7 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 26, 2025
திருச்செங்கோடு அருகே விபத்தில் தொழிலாளி பலி!

சேலம் மாவட்டம் சின்னனூர் வண்ணார்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (55), முடிதிருத்தும் தொழிலாளி. நேற்று திருச்செங்கோடு ஆன்றாபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிர் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பலியானார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்றாபட்டியை சேர்ந்த செல்வராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.


