News April 15, 2024

நாமக்கல்: மதுக்கடைகளை மூட உத்தரவு

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்ரல்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேற்படி, உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News December 19, 2025

BREAKING: நாமக்கல்லில் 1 லட்சம் வாக்களர்கள் நீக்கம்!

image

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். நாமக்கல் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் இறந்த வாக்காளர்கள்,வேறு முகவரிக்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள், மற்ற இனங்கள் என ஆக மொத்தம் 1,93,706 வாக்குகாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக குமாரபாளையம் தொகுதியில் 20.07 சதவீதம் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

image

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!