News April 24, 2025

நாமக்கல் மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை ஏப்.25ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், காலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அதனை தொடர்ந்து கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். SHARE பண்ணுங்க

Similar News

News September 17, 2025

நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம் !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (17.09.2025) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்குத் தத்தம் உட்கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

நாமக்கல்: தொழிலாளி மர்ம மரணம்!

image

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி குமாரபாளையத்தில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் வேலை செய்வதற்காக நேற்று வந்தார். அப்பொழுது நேற்று இரவு குமாரபாளையம் பிரதான சாலையில் உள்ள மூன்றாவது மாடியில் அவர் தங்கி இருந்த நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 17, 2025

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்பி மாதேஸ்வரன்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!