News September 27, 2024
நாமக்கல் போதை பொருள் ஒழிப்பு மாரத்தான்

Chakravarthi study abroad Pvt Ltd உடன் இணைந்து நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நம்ம நாமக்கல் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நாமக்கல் காவல் நிலையம் உள்ள மைதானத்தில் 6/10/2024 அன்று காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதில் அணைத்து மாவட்டங்களில் இருந்தும் பங்கு பெறலாம் வயது வரம்பு கிடையாது.9894493331 தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
Similar News
News November 23, 2025
நாமக்கல்லில் வரலாறு காணாத விலை உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.23) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 94-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முட்டை விலை வரலாறு காணாத உச்ச நிலையில் விற்பனையாகி வருகிறது.
News November 23, 2025
நாமக்கல் அருகே விவசாயிக்கு கத்தி குத்து!

நாமக்கல், தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் (80). விவசாயி. தோட்டத்தில் தனியாக இருந்த சுப்பராயனை மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நிலத்தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
News November 22, 2025
ராசிபுரம் அருகே பெண் விபரீத முடிவு

ராசிபுரம் அருகே சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(24).இவரது மனைவி காயத்ரி(20). இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


