News August 6, 2024

நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Similar News

News November 20, 2025

நாமக்கல்: தண்ணீர் என நினைத்து குடித்து இளம்பெண் சாவு

image

நாமக்கல் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (23), கணவர் மோகன்ராஜ் மற்றும் 3 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். திண்டமங்கலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது, வயலில் பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்து கலந்த தண்ணீரை குடிநீர் என தவறாக குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

நாமக்கல்: மகளிர் சுய உதவி குழுவில் ரூ.10 லட்சம் மோசடி!

image

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்த வாழவந்தி கோம்பை ஊராட்சியின் புளியங்காடு கிராம மகளிர் சுயஉதவி குழுவில், உறுப்பினர்களின் ஒப்புதலுமின்றி 3 பெண்கள் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. வங்கி மீதமுள்ள பெண்களிடம் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த 3 பெண்கள்மீது சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

News November 20, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் தொடர்புகொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கூறிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!