News August 6, 2024

நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Similar News

News October 20, 2025

புதுச்சத்திரம்: கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து!

image

புதுச்சத்திரம் மேம்பாலத்தில் கண்டைனர் லாரியின் இடது பின் பக்க டயர் பஞ்சர் காரணமாக டிரைவர் வேறு டயரை மாற்றி கொண்டிருக்கும் போது, திண்டுக்கல் நோக்கி 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

News October 20, 2025

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி வாழ்த்து

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. ஒளிமயமான இந்த திருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறும், மேலும் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News October 19, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.19 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு -9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!