News August 9, 2024

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், பரமத்தி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது கணவர் முருகன் சாலை விபத்தில் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் ரிலையன்ஸ் தர மறுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. நேற்று மாலை விசாரணை முடிவில், முருகன் குடும்பத்தாருக்கு ரூ 22 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Similar News

News November 22, 2025

வாக்காளர் பட்டியல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நவம்பர்-22ந் தேதி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 22, 2025

100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கட்சியினா் சிறப்பாக கொண்டாட வேண்டும், நவ.27-ல் பிறக்கும் நூறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

News November 22, 2025

நாமக்கல்: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் கோழிகளில் ஏற்பட்ட வெள்ளை கழிச்சல் காரணமாக பல கோழிகள் இறந்ததாக, கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள், கோழிகளின் எதிர்ப்பு சக்தியை ஊநீர் பரிசோதனை மூலம் அறிந்து, தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!