News August 9, 2024
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், பரமத்தி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது கணவர் முருகன் சாலை விபத்தில் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் ரிலையன்ஸ் தர மறுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. நேற்று மாலை விசாரணை முடிவில், முருகன் குடும்பத்தாருக்கு ரூ 22 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News November 14, 2025
நாமக்கல்லில் 58-வது தேசிய நூலக வார விழா!

நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 58-வது தேசிய நூலக வார விழா, வரும் (16-11-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகிக்க உள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
News November 14, 2025
நாமக்கல்: 11,364 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர்!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை நவ.15ஆம் தேதி முதல் தாள் நடைபெற உள்ளது. இதில் 1,708 நபர்களும் 16ஆம் தேதி இரண்டாவது தாள் நடைபெற உள்ளது. இதில் 9,656 நபர்கள் என மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் 11,364 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-14ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.


