News April 13, 2024
நாமக்கல் நகரில் கடை திறப்பு

நாமக்கல் நகரில் தோசை ஹட் எனும் புதிய சைவ உணவக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட சைவ வகைகளில் தோசை கிடைக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (நவ.22) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என நாமக்கல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
நாமக்கல் மக்களே ரெடியா?

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் மேலாளர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நேரில் தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து கல்வித் தகுதியுடையோர் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News November 21, 2025
திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்ட்டு மஞ்சிஹி (28) மற்றும் சோபியா (23) தம்பதி மொஞ்சனூர் அரசம்பாளையம் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையிலான தகராறுக்குப் பிறகு மஞ்சிஹி வேப்பமரத்தில் தூக்கிட்டு கொண்டார். மனைவி மீட்டாலும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.


