News April 13, 2024
நாமக்கல் நகரில் கடை திறப்பு

நாமக்கல் நகரில் தோசை ஹட் எனும் புதிய சைவ உணவக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட சைவ வகைகளில் தோசை கிடைக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
நாமக்கல்லில் நீரிழிவு நோய்க்கான மையம் துவக்கம்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.28) டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தினை ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் உள்ள டைப்-1 நீரிழிவு நோயால் ஏற்படும் தடுக்கக்கூடிய கண் பார்வை இழப்பை கண்டறிய AI தொழில்நுட்பம் கொண்ட கண் கேமரா, சிறுநீர செயல்பாடு, ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை சாதனம் உள்ளிட்டவை பல வசதிகளை பார்வையிட்டார்.
News November 28, 2025
வங்கி வைப்புத்தொகைகள் வழங்கும் முகாம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தலைமையில் இன்று 28.11.2025 உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத்தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாமில் 303 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலைகள் வழங்கினார். இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டல்படி இம்முகாம் நடைபெற்றது.
News November 28, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.28) நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895 ), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (பெருமாள் – 9498169222) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


