News March 29, 2024
நாமக்கல் தேர்தல் பணிமனை திறப்பு விழா

இந்திய கூட்டணி கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஈஸ்வரன் ,பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் பணிமனையை திறந்து வைத்தனர்.
Similar News
News November 27, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
நாமக்கல்லில் மானியம் பெற ஆட்சியர் அறிவிப்பு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். 1.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. இந்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு கட்டணமின்றி பெறலாம்.
News November 27, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (நவ.28) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைக ளையும் தெரிவித்து பயன்பெறலாம்.


