News March 19, 2024
நாமக்கல் தேர்தல் குறித்து சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Similar News
News November 28, 2025
டிசம்பர் 2, 3-ந் தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், ரேஷன்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வருகிற டிச. 2-(ம)3-ந் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக இந்த விலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
நாமக்கல்லில் நீரிழிவு நோய்க்கான மையம் துவக்கம்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.28) டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தினை ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் உள்ள டைப்-1 நீரிழிவு நோயால் ஏற்படும் தடுக்கக்கூடிய கண் பார்வை இழப்பை கண்டறிய AI தொழில்நுட்பம் கொண்ட கண் கேமரா, சிறுநீர செயல்பாடு, ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை சாதனம் உள்ளிட்டவை பல வசதிகளை பார்வையிட்டார்.


