News April 14, 2024
நாமக்கல்: தபால் வாக்கு செலுத்திய மாவட்ட பி.ஆர்.ஓ

மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நேற்று செலுத்தினார்.
Similar News
News September 18, 2025
நாமக்கல்: மதுக்கடை அகற்ற எம்.பி. வலியுறுத்தல்!

மோகனூரில் அருள்மிகு ஸ்ரீ நவலடியான் கோயில் மிக அருகில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அப்பகுதியினருக்கும் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் எம்.பி மாதேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தனர்.இக் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!
News September 18, 2025
நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து பலி!

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதே பிரச்சனை இருப்பதாக புகார் எழுகிறது.உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!
News September 18, 2025
நாமக்கல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <