News October 24, 2024
நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், திடீரென கட்டடங்கள் முழுவதும் அதிர்ந்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது கட்டடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 மாடிகளை கொண்ட அந்தக் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News December 19, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து தேவையை செய்வார். SHARE பண்ணுங்க!
News December 19, 2025
BREAKING: சென்னையில் இனி தடை!

சென்னையில் ராட்வீலர், பிட்புல் நாய்களுக்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்குவதால் சென்னை மாநகராட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை முதல் ராட்வீலர், பிட்புல் நாய்களுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உரிமம் உள்ள நாய்களை விதிகளுக்கு உட்பட்டு வெளியே அழைத்து வரவேண்டும். மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
News December 19, 2025
சென்னை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


