News March 27, 2024
நாமக்கல்: ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

மக்களவை 24 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவுற்றது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இது வரை 58 பேர் தங்களது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர் கடைசி நாளான இன்று ஓரே நாளில் மட்டும் 31 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Similar News
News April 21, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்களின் விவரம் நாமக்கல் – கோமதி (94981 67158), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு -சிவக்குமார் (9498176695), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 20, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-20) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 20, 2025
நாமக்கல்: முட்டை விலை 20 பைசா குறைவு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப். 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.95 பைசா நிர்ணயிக்கப்பட்டது.