News September 28, 2024
நாமக்கல் எஸ்.பி பரபரப்பு தகவல்

வட மாநிலத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதேபோல் 2021 இல் மராட்டியத்தில் கொள்ளையடிக்க சென்ற போது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். தற்போது பணத்தை திருடி விட்டு தப்ப முயன்ற போது நேற்று குமாரபாளையம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 11, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கான முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 10) மாலை நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.4.75 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News August 11, 2025
நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு, நாமக்கல் வழியாக சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. அதன் கட்டண விபரம், புறப்படும் நேரம் மற்றும் சென்று சேரும் நேர விபரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News August 10, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் -செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .