News April 17, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (16/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
நாமக்கல்: முட்டை விலை மாற்றமின்றி நீட்டிப்பு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் (நவ.27) முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆகவே நீடிக்கின்றது. கடந்த ஒரு வாரமாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
நாமக்கல்: கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்!

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வரும் டிச.04ந் தேதிக்குள் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் (ம) ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலை கடைகளில் திரும்ப ஒப்படைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 27, 2025
நாமக்கல்: வங்கி ஊழியரிடம் திருட்டு

நாமக்கல் வீசாணத்தைச் சேர்ந்த கோகிலா (33) வங்கி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம் தேதி பணியை முடித்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் வீட்டுக்கு சென்றபோது, பஸ்சின் பின்புறம் நின்ற மர்ம நபர்கள் அவரின் பையில் இருந்த பர்ஸில் இருந்து ரூ.15,000 திருடினர். இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


