News February 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
நாமக்கல்: ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

எஸ்.ஐ.ஆர். (SIR) திட்டப் பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா எச்சரித்துள்ளார். பணிகளில் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அதிகாரிகளும் பணியாளர்களும் திட்டச் செயலாக்கத்தை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
News November 17, 2025
நாமக்கல்: 3,739 கோடி ரூபாய் கடன் – தகவல்

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், கூட்டுறவு வார விழாவில் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்த நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.
News November 17, 2025
நாமக்கல்லில் ரூ.14,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நாளைக்குள் (நவ.17) வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.


