News August 9, 2024
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடிய சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை , பொன்னான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த தகுதியான நபர்களுக்கு, நற்கருணை வீரர்கள் விருதும் மற்றும் பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
நாமக்கல்; கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (20-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் அதே விலையில் நீடிக்கின்றது.
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 20, 2025
நாமக்கல்: தண்ணீர் என நினைத்து குடித்து இளம்பெண் சாவு

நாமக்கல் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (23), கணவர் மோகன்ராஜ் மற்றும் 3 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். திண்டமங்கலத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது, வயலில் பயன்படுத்த வைத்திருந்த விஷ மருந்து கலந்த தண்ணீரை குடிநீர் என தவறாக குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


