News August 9, 2024
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடிய சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை , பொன்னான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த தகுதியான நபர்களுக்கு, நற்கருணை வீரர்கள் விருதும் மற்றும் பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
ராசிபுரம் அருகே பெண் விபரீத முடிவு

ராசிபுரம் அருகே சப்பையாபுரம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(24).இவரது மனைவி காயத்ரி(20). இவா்களுக்கு ஒருமாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ஆனந்தகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 19-ஆம் தேதி விஷமருந்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.
News November 22, 2025
நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.


