News August 24, 2024
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று 11 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News November 8, 2025
நாமக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இன்று மிஸ் பண்ணாதீங்க!

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று (நவ.8) நடைபெறுகிறது. அனைத்து தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இருக்கும் வட்ட வழங்கல் பிரிவில் (காலை 10 – மதியம் 1 மணி வரை) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், பெயர் திருத்தம், செல்போன் எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் ஐந்து காசு உயர்ந்து ஒரு முட்டை விலை 5.60 காசுகளாக உயர்ந்துள்ளது நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோலி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை வலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்த காரணத்தால் 5 காசுகள் உயர்ந்து முட்டைகளை 5.60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை!
News November 8, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (07.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


