News February 17, 2025

 நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் மாத மாசி முதல் திங்கள்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்டஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன பின்தங்ககவச அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.

Similar News

News December 1, 2025

நாமக்கல்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

நாமக்கல் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி தேதி டிச.04 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

News December 1, 2025

நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

image

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!