News April 22, 2025

நாமக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 144 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

image

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

நாமகிரிபேட்டை அருகே வாலிபர் மர்மசாவு!

image

நாமகிரிபேட்டை, ஈஸ்வரமூர்த்திபாளைத்தில் முத்துலிங்கம் என்பவர் தனது தோட்டத்தின் அருகே செல்போன் கோபுரம் அருகில் நேற்று முன்தினம் 30 வயது ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை போலீசாருக்கு தெரிவித்தார். விசாரணையில் இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என உறுதி செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்த நிகழ்வின் காரணம் குறித்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!