News April 29, 2025

நாமக்கல்லில்  9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

நாமக்கல்: மதுக்கடை அகற்ற எம்.பி. வலியுறுத்தல்!

image

மோகனூரில் அருள்மிகு ஸ்ரீ நவலடியான் கோயில் மிக அருகில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அப்பகுதியினருக்கும் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் எம்.பி மாதேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தனர்.இக் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!

News September 18, 2025

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து பலி!

image

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதே பிரச்சனை இருப்பதாக புகார் எழுகிறது.உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News September 18, 2025

நாமக்கல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!