News August 26, 2024

நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

image

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

Similar News

News November 23, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

News November 23, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.23) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), பள்ளிபாளையம் – (டேவிட் பாலு – 9486540373) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News November 23, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.23.51 லட்சத்திற்கு விற்பனை!

image

நாமக்கல்லில் காலை, மாலை என இருவேளை உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த 55,010 கிலோ காய் கனிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் ரூ.23,51,570 விற்பனையானது. உழவர் சந்தைக்கு 11,002 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.

error: Content is protected !!