News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News November 16, 2025
முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ. 6 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.112 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
News November 16, 2025
நாமக்கல்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

நாமக்கல் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
முட்டை விலை கிடு கிடுவென உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக விற்பனையாகி வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


