News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News December 19, 2025
BREAKING: நாமக்கல்லில் 1 லட்சம் வாக்களர்கள் நீக்கம்!

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். நாமக்கல் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் இறந்த வாக்காளர்கள்,வேறு முகவரிக்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள், மற்ற இனங்கள் என ஆக மொத்தம் 1,93,706 வாக்குகாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக குமாரபாளையம் தொகுதியில் 20.07 சதவீதம் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
திருச்செங்கோட்டில் லாரி மோதி விவசாயி பலி

திருச்செங்கோடு கூனாண்டிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன் (70), நேற்று முன்தினம் கடைக்கு செல்ல தனது மொபட்டில் திருச்செங்கோடு மலை சுற்றுப்பாதையில் சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து வந்த லாரி மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த காதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமாக்க மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமாக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


