News August 26, 2024

நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

image

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

Similar News

News October 17, 2025

நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News October 17, 2025

நாமக்கல்: மின்கம்பி உதவியாளர் தேர்வு இன்றே கடைசி நாள்!

image

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13,14 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இணையதளத்தில் https://skilltraining.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.

News October 17, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

error: Content is protected !!