News March 20, 2024
நாமக்கல்லில் விநோதமான முறையில் வேட்பு மனுதாக்கல்

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமக்கல் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நபராக வந்திருந்தார்.அவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.சோதனைக்கு பிறகு காந்தியவாதி ரமேஷை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்
Similar News
News November 20, 2025
BREAKING: நாமக்கல்லில் முட்டை விலை கிடுகிடுவென உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.05 ஆக நீடித்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.10-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாறு காணாத முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 20, 2025
நாமக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள்<
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் OTP கேட்டு நடைபெறும் மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனே 1930-க்கு புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


