News March 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை 25 காசுகள் அதிகரிப்பு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 27ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.25 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் விலைப்புள்ளி பட்டியலை தயார் செய்து, www.msmeonline.tn.gov.in/twees விண்ணப்பிக்கலாம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தீவனச் செலவு, மழை, குளிர் ஆகியவை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த ஒரு வாரமாக நிலைத்து உள்ளது.
News December 1, 2025
நாமக்கல்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


