News August 24, 2024
நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 23, 2025
நாமக்கல்லில் தக்காளி விலை உயர்வு!

பருவ மழை காரணமாக காய்கனி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து மிக குறைவாக இருப்பதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ.23) 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News November 23, 2025
நாமக்கல்: ரூ.64,820 சம்பளத்தில் வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI)
மொத்த பணியிடங்கள்: 115.
கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate.
சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <
News November 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மழையளவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.


