News August 24, 2024

நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 12, 2025

தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.

News December 12, 2025

தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.

News December 11, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!