News August 17, 2024
நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 24, 2025
மோகனூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் சடலம்!

மோகனூர் அருகே வடுகப்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (75) ஒருவந்தூரில் உள்ள தமிழழகன் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி சென்ற அவர் காணாமல் போனார். நேற்று மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அது சுப்பிரமணி என்பதை மகன் கோபி அடையாளம் கண்டார். மோகனூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
நாமக்கல்: ரூ.23.51 லட்சத்துக்கு காய்கறி பழங்கள் விற்பனை

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விடுமுறை தினத்தை யொட்டி நேற்று காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 44 டன் காய்கறிகள் மற்றும் 11 டன் பழங்கள் என மொத்தம் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 570-க்கு விற்பனை செய்யப்பட்டன.
News November 24, 2025
கந்தம்பாளையத்தில் பரபரப்பு! தாய் திட்டியதால் நடந்த விபரீதம்

கந்தம்பாளையம் அருகே கரிச்சிபாளையத்தை சேர்ந்த பவதாரணி(18), வேலூர் தனியார் கல்லூரி மாணவி. விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, வேலை செய்யவில்லை என்று தாய் சரோஜா கண்டித்ததாக தெரிகிறது. மனமுடைந்த பவதாரணி 3-ந்தேதி காலை மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயத்துடன் திருச்செங்கோடு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


