News September 29, 2025

நாமக்கல்லில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

image

தவெக சார்பில் நேற்று முன் தினம் நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததால், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், நாமக்கல் மாவட்டச் செயலர் சதீஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், பாதுகாப்புக்கு தொந்தரவு ஆகிய பிரிவுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Similar News

News December 8, 2025

நாமக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

மோகனூர்: 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!

image

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் வீட்டில் கட்டிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் 18 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் பொம்மம்பட்டி மாதேஸ் (35), விக்ரம்(25), சோலைராஜா(33), விஜய்(24). மவுலீஸ்குமார்(25) மற்றும் 17, 18 வயது டைய சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News December 8, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!