News May 7, 2025

நாமக்கல்லில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட கோயில்

image

பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் ஆனது. இங்கு தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கப்பட்டு 7 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. SHARE IT!

Similar News

News November 28, 2025

நாமக்கல்லில் இலவசம்.. மிஸ் பண்ணாதீங்க!

image

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு, இணையதள வழியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

News November 28, 2025

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக நீடித்து வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

News November 28, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வரும் டிச.04ஆம் தேதிக்குள் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் (ம) ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலை கடைகளில் திரும்ப ஒப்படைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!