News May 7, 2025
நாமக்கல்லில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட கோயில்

பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாளை தரிசித்ததால் இவ்வூர் பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் ஆனது. இங்கு தை மாதத்தில் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கப்பட்டு 7 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. SHARE IT!
Similar News
News September 14, 2025
நாமக்கல்: IMPORTANT ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் எர்ணாபுரம், CMS பொறியியல் கல்லூரியில் வரும் 20ம் தேதி சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற இந்த <
News September 14, 2025
நாமக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

நாமக்கல், போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் ஓலப்பாளையத்தை சேர்ந்த ஜாபர்வுல்லா மகன் இலியாஸ், 26, பாலப்பட்டி அருகே, குமாரபாளையத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரேம்குமார், 30 ஆகிய இருவர் மற்றும் கஞ்சா பொட்டலங்களை கடத்திய வழக்கில் முட்டாஞ்செட்டியை சேர்ந்த லோகேஷ் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News September 14, 2025
நாமக்கல்: பாலியல் வழக்கில் மேஸ்திரி கைது!

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே சோழசிராமணி, மாரப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி மதன்குமார், 21, என்பவர், 15 வயது சிறுமியை கடத்தி, கோவிலில் கட்டாய திருமணம் செய்துள்ளார். ப.வேலுார் போலீசார் சிறுமியை மீட்டு, போக்சோ சட்டத்தில் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.