News January 2, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆகவே நீடிக்கிறது.

Similar News

News December 13, 2025

நாமக்கலில் பண்ணை அமைக்க வேண்டுமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (13-12-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.114-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை, இதுவரை வரலாறு காணாத உச்ச விலையான ரூ. 6.15-க்கு விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்குவதால் கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை உயர்வடைந்துள்ளது.

News December 13, 2025

வெண்ணந்தூரில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

image

நாமக்கல் மாவட்டம்,வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆயில் மில் சூப்பர்வைசர் ஞானசேகரன் (45), குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ராசாபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரனின் மரணத்திற்கான காரணம் குறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!