News May 8, 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.
Similar News
News December 4, 2025
தமிழ் திறனறித் தேர்வில் 71 மாணவர்கள் தேர்ச்சி

2025 – 26ம் கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஊக்கத் தொகை பெறுவதற்கான தேர்வு பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 71 மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.16 ஆயிரத்து 500 ஊக்கத் தொகை என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News December 4, 2025
கள்ளக்குறிச்சி: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News December 4, 2025
கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 2, தியாகதுருகம் 32, விருகாவூர் 20, கச்சிராயபாளையம் 11.5, கோமுகி அணை 3, அரியலுார் 7, மாவட்டத்தில் சராசரியாக 17.35 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனுாரில் 96 மி.மீ., மழை பதிவாகியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.


