News August 27, 2024

நான்கு வழி சாலை பணிகள் குறித்து ஆய்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சரின் சாலை விரிவாக்க திட்டம் 2024 – 25 ன் படி அருப்புக்கோட்டை தாலுகா கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் வரையிலான 6 கி.மீ தூரம் சாலை ரூ 36.40 கோடி மதிப்பில் 4 வழி‌ சாலையாக மாற்றப்பட உள்ளது.‌‌ இந்நிலையில் இன்று 4 வழி சாலை அமைய உள்ள பகுதியில் மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார்.

Similar News

News November 12, 2025

சிவகாசியில் கடையை உடைத்து கொள்ளை

image

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ் (29). இவர் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்தநிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த இரு செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 12, 2025

சிவகாசியில் சிறுமி கர்ப்பம்; மூவர் மீது வழக்கு

image

திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், தனுஷ், முனீஸ் ஆகிய மூவரிடமும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனீஸ் என்ற இளைஞர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து மதுபோதையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

News November 12, 2025

விருதுநகர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

விருதுநகர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு.<> இங்கு கிளிக் <<>>செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!