News September 14, 2024
நாட்டு சர்க்கரை பற்றிய தவறான புரிதல்..

வெள்ளை சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலக்கும். நாட்டு சர்க்கரை மெதுவாக கலக்கும். அவ்வளவுதான். ஆனால், நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் ஏறாது என்ற தவறான புரிதல் சர்க்கரை நோயாளிகளிடம் உள்ளது. அதனால் காபி, டீயில் 2, 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்கின்றனர். இது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News November 22, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகள் சார்பில் நவ.26-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


