News June 25, 2024

நாட்டுக்கோழி வளர்க்க மானியம் அறிவிப்பு

image

மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக கால்நடைத்துறை அறிவித்துள்ளது. கொட்டகைக்கான கட்டுமான செலவு, தீவனத்தட்டு உள்ளிட்ட செலவு ஆகியவற்றில் 50 சதவீதம் என அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மானியம் பெறலாம். இதில், விதவை, ஆதரவற்றோர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Similar News

News September 18, 2025

BREAKING: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு மற்றும் கோயில் குடமுழுக்கிற்கு முன்பாக புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிச.மாதம் அமைச்சர் குடமுழுக்கு குறித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2025

மதுரை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் செப். 19 சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News September 18, 2025

மதுரையில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்

image

மதுரையில் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், ”1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன”என்றார்.

error: Content is protected !!