News December 4, 2024
நாகை விவசயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News December 24, 2025
நாகையில் 10 பெண்கள் உள்பட 48 பேர் கைது!

தொழிலாளர்ளுக்கு விரோதமாக இருப்பதாக கூறி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாகை நீதிமன்றம் அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
News December 24, 2025
நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் (AABCS) திட்டத்தின் கீழ் எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி அவசியமில்லை. மேலும், மொத்த தொகையில் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.23) இரவு 10 மணி முதல் இன்று (டிச.24) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


