News May 8, 2025

நாகை: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News November 27, 2025

நாகை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 27, 2025

BREAKING: நாகை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நவ.28 (நாளை) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!

News November 27, 2025

நாகை: கட்சி தலைவர் மீது குண்டாஸ்

image

நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி தென்பாதியைச் சேர்ந்த
புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ், திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக சித்தரித்த விவகாரத்தில் 2 வாரங்களுக்கு முன் கீழையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் எஸ்பி பரிந்துரையின் பேரில், ஆனந்தராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!