News January 24, 2025

நாகை: ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

image

நாகப்பட்டினம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு முகாம் நாளை (ஜன.25) நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகை வட்ட வழங்கல் அலுவலர் ரகு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

நாகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமை பணிகளில் தேர்ச்சி பெறுவதற்காக ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்<> www.fisheries.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, வருகிற நவ.25-ம் தேதிக்குள் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

நாகை: சாலையோரம் கிடந்த பிணம்

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!