News April 14, 2025

நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News November 23, 2025

நாகை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 23, 2025

நாகையில் அதிகபட்சமாக 4.2செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள் நாகை 4.2செ.மீ, திருப்பூண்டி 2.6செ.மீ, வேளாங்கண்ணி 3.9செ.மீ திருக்குவளை 3.4செ.மீ தலைஞாயிறு 1.6செ.மீ வேதாரண்யம் 3.8செ.மீ, கோடியக்கரை 2.6செ.மீ‌ ஆகவும், மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் சராசரி அளவு 3.1செ.மீ பதிவாகியுள்ளது

News November 23, 2025

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை -எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ. 22) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் வருகின்ற நவ.24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!