News April 14, 2025
நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
நாகை: அரசு ஊழியர் தற்கொலை

திருக்குவளை அருகே முத்தரசபுரத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளர் கலைமணி (40) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கீழ்வேளுர் வட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 10-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்


