News August 2, 2024
நாகை: ரூ.4.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

நாகையை அடுத்த ஐவநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நிலத்தை மீட்ட அதிகாரிகள், அதன் சந்தை மதிப்பு ரூ.4.50 கோடி வரை இருக்கும் எனத் தெரிவித்தனர்.
Similar News
News August 5, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவற்றை பெற்றிட தகுதிவாய்ந்த நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் பெற்று கொண்டு, உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப .ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
கோரக்க சித்தர் கோயிலின் சிறப்பு பூஜை

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.
News August 4, 2025
நாகை: மாதம் சம்பளம் 1 லட்சத்தில் வேலை APLLY NOW!

நாகையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <