News April 30, 2025

நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

image

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

நாகை: இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இணைந்து 180 பேருக்கு லாபகரமாக கால்நடைகள் வளர்ப்பது குறித்த பயிற்சி ஆறுமாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE NOW!

News September 16, 2025

நாகை அருகே குளத்தில் மிதந்த பிணம்

image

வேதாரண்யம் தாலுகா, திருவாசக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2025

100% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவிகித மானியத்தில் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் விவசாய சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். LIKE & SHARE..

error: Content is protected !!