News August 25, 2024
நாகை மீனவர்களுக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விசைப்படகுடன் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் பெற்று யாழ்பாணம் சிறையில் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News December 4, 2025
நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
நாகை: CCTV பழுதுநீக்கும் பயிற்சி அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், வேதாரண்யத்தில் மத்திய அரசு மூலம் 13 நாட்கள் இலவச சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கும் பயிற்சி வருகிற 10ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 மற்றும் 9047710810 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


